Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Wednesday, 6 May 2015

இயற்கை பேஸ்ட்கள்

உங்கள் பற்கள், ஆரோக்கியமாகவும்
வெண்மையாகவும் இருக்க, சூப்பரான
இயற்கை பேஸ்ட்கள்
************************************************************

பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும்
என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்க
ளை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால்
மட்டும் பற்கள் சுத்தமாகி விடுமா என்ன?
பற்களை சுத்தப்படுத் தும் பேஸ்ட்களை மட்டும்
பயன்படுத் தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்
று நினைக்க வேண்டாம். எப்போதும்
செயற்கை பொருட்களை விட இயற்
கை பொருட்களுக்கு நிறைய மகத்து வம் உள்ளது.
அதேப்போல்தான் பற்களை துலக்கவும் ஒரு சில
சூப் பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த
பொருட்கள் அனை த்தும் அன்றாடம் வீட்டில்
பயன்படுத்தும் பொருட்கள்தா ன்.
அது என்னவெ ன்று பார்ப்போமா!!!

வேப்பங்குச்சி

இது ஒரு பழங்கால முறை. இன் றும்
கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்ப ங்குச்சியைப்
பயன்படுத்திதான் தங்க ள் பற்களை துலக்குகின்றனர்.
அத னால் தான், அவர்கள் பற்கள் இன்று ம் உறுதியாக
இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய
ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள்
இருக்கிறது. மேலும் இத னைக்
கொண்டு பற்களை துலக்கி னால், பற்கள்
நன்கு சுத்தமாக பளிச் சென்று, துர் நாற்றம்
நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராம
லும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை
கொண்டு பற்களை துல க்க, முதலில் அந்த
குச்சியை உடைத்து,
அதன்ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க
வேண்டும்.

உப்பு

உப்பைக் கொண்டும் பற்களை துலக்க லாம். ஏனெனில்
இதில் சோடியம் அதிக ம் உள்ளது. இதனால் பற்களில்
உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும்
ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற் களில்
வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக்
கொண்டு பற்களை துலக்க லாம். மேலும்
இது வாய்துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும்.
ஆகவே தினமு ம் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக்
கொண்டு, பற்களை துல க்குங்கள், பின் பாருங்கள்
அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயை வைத்து பற்களைதுலக்கினா
ல், பற்கள் நன்கு வெள்ளையாக காணப்படும்.
இது வும் பற்களை துலக்க ஒரு சிறந்த முறை.
அதற்கு அரை டேபிள் ஸ்பூன்
கடுகு எண்ணெயோடு,
சிறி து உப்பை சேர்த்து கலந்து, பற்களை துலக்க
வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமி ன்
சி உள்ளது. இது பற்கள் மற்றும்
ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவாக
இந்த எலுமிச்சை எத்தகையஅழுக்குகள் என்றாலும்
நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள
அழுக்குகளை நீக்காமலா இருக்கும்.
ஆகவே அதற்கு தினமும்
எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும்
ஈறுகளை தேய்க்க வேண்டு ம். பின் பாருங்கள் வாய்
புத்துணர்ச்சியு டன் இருக்கும்.

கிராம்பு

கிராம்பில் நிறைய மருத்துவ குணங் கள்
அடங்கியுள்ளன. அத்தகைய கிரா ம்பு பற்களும்
மிகவும் சிறந்தது. ஆக
வே சிறிது கிராம்பு பொடியை வைத்து பற்களை தேய்க்க
வேண்டும். இதனா ல் பற்கள் வெள்ளையாக
இருப்பதோ டு, பற்களில் வலிகள் ஏற்பட்டால், அத
னை சரி செய்துவிடும்.

ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்க,
மேற்கூறிய பொருட் களையெல்லாம்
பயன்படுத்துங்கள், பற்கள் நன்கு பளிச்சென்று மின்

Friday, 28 November 2014

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....
1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

Thursday, 3 July 2014

நல்ல ஆரோக்கியம்


தெய்வவழிபாட்டுடன், உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் செய்து நல்ல சிந்தனைகளோடு வாழ்ந்தால் நோய் நொடிகள் நம்மை அண்டாது. அளவான உணவு, நிறைவான தியானம், சுயநலமில்லாத பக்தியோடு இறைவனை வழிபட்டு வந்தால் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் ஆனந்தமாக வாழலாம்!